அதிகாலை நேரம் (அரசாளும் தெய்வம்)
அப்பா உம் பாதம் ஆர்வமாய் வந்திருக்கிறேன்
உம் நாமம் சொல்லி ஓய்வின்றிப் பாடி
உள்ளம் மகிழ்ந்திருப்பேன்
- கூக்குரல் கேட்பவரே நன்றி நன்றி ஐயா
குறைகளைத் தீர்ப்பவரே நன்றி நன்றி ஐயா - பெலனே கன்மலையே
பெரியவரே என் உயிரே - நினைவெல்லாம் அறிபவரே
நிம்மதி தருபவரே - நலன்தரும் நல்மருந்தே
நன்மைகளின் ஊற்றே - மரணத்தை ஜெயித்தவரே நன்றி நன்றி ஐயா
மன்னா பொழிந்தவரே நன்றி நன்றி ஐயா - விண்ணப்பம் கேட்பவரே
கண்ணீர் துடைப்பவரே