Alaymothum Alkadalil Adiyaen Naan Oru Siru Kappal – Tamil Christian Song Lyrics – Tamil Christian Prayer Songs
அலைமோதும் ஆழ்கடலில் அடியேன்
நான் ஒரு சிறுகப்பல், ஆண்டவரே வாருமையா(2)
என் கப்பலில் மாலுமியாய்,
என் கப்பலில் நீர் மாலுமியாய்
1. நான்கு திசைகளில் நான் செல்லும் திசையை
நானறியேனே இயேசுவே
நீரெந்தன் கப்பலில் நித்தமும் இருந்தால்(2)
நிச்சயம் சேர்வேன் அக்கரையில் சென்று
நித்தமும் தேவனை பாடிடுவேன்(2)
2. சிறுபழுதொன்றும் என்னில் வராமல்
தினந்தோறும் என்னைக் காத்திடும்
ஒருப் பொழுதும் உம் அன்பை விடாமல்
அன்பினையே எண்ணி துன்பங்களைத் தள்ளி
விண்ணுலகை எண்ணி ஓடிடுவேன் (2)
3. கண்ணீர் நிறைந்த காரிருள் பாதையில்
கரம்பிடித்தென்னை நடத்துமே
கடும்புயல் வரினும் பெருந்துணை நீரே
தீரும் என் சுயபெலம்-தாரும் உம் புயபெலம்
வாரும் என் அடைக்கலம் என்றென்றுமே
Song Composer:Pr. M G Wilson | Sung by: Madurantakam Yesudhas | Alaymothum Alkadalil Adiyaen | அலைமோதும் ஆழ்கடலில் அடியேன் | Tamil Christian Song Lyrics | Tamil Christian Songs of Prayer