என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார்
தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார்
- இனி நான் பாவியல்ல
பரிசுத்தமாகிவிட்டேன்
நேசரின் பின் செல்வேன் – நான்
திரும்பி பார்க்க மாட்டேன் - ஆழ்கடலில் எறிந்துவிட்டார்
காலாலே மிதித்து விட்டார்
நினைவுகூர மாட்டார் – என்
நேசரைத் துதிக்கின்றேன் – இனி - கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன்
மறுபடி பிறந்துவிட்டேன்
பழையன கழிந்தனவே – நான்
புதியன படைப்பானேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 1 | En Pavangal En Yesu Manithu vittar | என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் | Tamil Christian Song Lyrics