தூபம் போல் என் ஜெபங்கள்
ஏற்றுக் கொள்ளும் ஐயா
மாலை பலி போல் என் கைகளை
உயர்த்தினேன் ஐயா
உம்மை நோக்கி கதறுகிறேன்
விரைவாய் உதவி செய்யும்
- என் குற்றங்கள் நீர் மனதில் கொண்டால்
நிலைநிற்க முடியாதையா
மன்னிப்புத் தருபவரே
உம்மைத் தான் தேடுகிறேன் - விடியலுக்காய் காத்திருக்கும்
காவலனைப் பார்க்கிலும்
என் நெஞ்சம் ஆவலுடன்
உமக்காய் ஏங்குதையா - என் வாய்க்கு காவல் வையும்
காத்துக் கொள்ளுமையா
தீயன எதையுமே
நாட விடாதேயும் - என் கண்கள் உம்மைத் தானே
நோக்கி இருக்கின்றன
அடைக்கலம் புகுந்தேன் – நான்
அழிய விடாதேயும்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 18 | Thoobam Pol En Jepangal | தூபம் போல் என் ஜெபங்கள் | Tamil Christian Song Lyrics