புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
- இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
வரவேண்டும் வரவேண்டும்
- தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா - எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே - உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே - துரயம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 19 | Puthiya Valvu Tharum Punitha | புதிய வாழ்வு தரும் புனித | Tamil Christian Song Lyrics