அப்பா என்னை முழுவதும் அர்ப்பணித்தேன் ஐயா
உயிரோடிருக்கும் நாளெல்லாம்
உமக்குச் சொந்தமையா
அர்ப்பணித்தேன் (நான்) அர்ப்பணித்தேன்
ஆவி ஆத்துமா சரீரம் அர்ப்பணித்தேன்
- உள்ளம் உடல் எல்லாமே
உமக்குத் தந்தேனையா
கள்ளம் கபடு இல்லாமல்
காத்துக் கொள்ளுமையா - உலகப்பெருமை சிற்றின்பம்
உதறிவிட்டேனையா
கசப்பு வெறுப்பு காயங்கள்
கடந்து போனதையா - வாக்குவாதம் பொறாமைகள்
தூக்கி எறிந்தேன் நான்
ஆண்டவர் இயேசுவை
ஆடையாய் அணிந்து கொண்டேன் நான் - உமக்காய் வாழும் வைராக்கியம்
உள்ளத்தில் வந்ததையா
எனக்காய் வாழும் எண்ணங்கள்
என்றோ மடிந்ததையா
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 20 | Appa Ennai Muluvathum | அப்பா என்னை முழுவதும் | Tamil Christian Song Lyrics