நான் உனக்கு போதித்து
நடக்கும் பாதையை
நாள்தோறும் காட்டுவேன் பயப்படாதே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை சொல்லுவேன்
அறிவுரை நான் கூறுவேன் – உனக்கு
- ஈசாக்கு விதை விதைத்து
நூறுமடங்கு அறுவடை செய்தான்
உன்னையும் ஆசீர்வதிப்பேன் – அதுபோல - ஏசேக்கு சித்னா
இன்றோடு முடிந்தது மகனே(ளே)
ரெகோபோத் தொடங்கிவிட்டது – உனக்கு - தேசத்தில் பலுகும்படி
உனக்கு இடம் உண்டாக்கினேன்
ரெகோபோத் உனக்கு உண்டு – இதுமுதல் - கர்த்தர் நிச்சயமாய்
உன்னோடு இருக்கிறார் என்று
அநேகர் அறிந்து கொள்வார்கள் – இதுமுதல்
(அறிக்கை செய்வார்கள்) - கலங்காதே நான்
உன்னோடு இருக்கிறேன் மகனே
பலுகிப் பெருகிடுவார் – தேசத்தில் - உனக்கு எதிரானோர்
உன் சார்பில் வருவார்கள்
சமாதானம் செய்வார்கள் – உன்னோடு
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 21 | Naan Unaku Pothithu Nadakum | நான் உனக்கு போதித்து நடக்கும் | Tamil Christian Song Lyrics