மாரநாதா இயேசு நாதா
சீக்கிரம் வாரும் ஐயா
வாரும் நாதா இயேசு நாதா
- மன்னவன் உம்மை கண்டு மறுரூபம் ஆகணுமே
விண்ணவர் கூட்டத்தோடு எந்நாளும் பாடணுமே - குடிவெறி களியாட்டம் அடியோடு அகற்றிவிட்டேன்
சண்டைகள் பொறாமைகள் என்றோ வெறுத்து விட்டேன் - பெருமை பாராட்டுகள் ஒருநாளும் வேண்டாம் ஐயா
சிற்றின்பம் பணமயக்கம் சிறிதளவும் வேண்டாம் ஐயா - நியமித்த ஓட்டத்திலே நித்தம் நான் ஓடிடுவேன்
நித்திய கிரீடம்தனை நான் நிச்சயமாய்ப் பெற்றுக்கொள்வேன் - ஆவியில் நிரம்பிடுவேன் அயராது ஜெபித்திடுவேன்
அப்பாவின் சுவிசேஷம் எப்போதும் முழங்கிடுவேன் - உம்முகம் பார்க்கணுமே உம் அருகில் இருக்கணுமே
உம் பாதம் அமரணுமே உம் குரல் கேட்கணுமே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 21 | Maranadha Yesu Natha Seekkiram | மாரநாதா இயேசு நாதா சீக்கிரம் | Tamil Christian Song Lyrics