போதுமானவரே புதுமையானவரே
பாதுகாப்பவரே என்பாவம் தீர்த்தவரே
ஆராதனை ஆராதனை
ஆயுளெல்லாம் ஆராதனை
- எனக்காக தண்டிக்கப்பட்டீரே
அதனால் நான் மன்னிக்கப்பட்டேன்
எனக்காக காயப்பட்டீரே
அதனால் நான் சுகம் பெற்றுக் கொண்டேன் - பாவங்கள் சுமந்ததனால் நான்
நீதிமானாய் மாற்றப்பட்டேன்
மரணத்தை ஏற்றுக் கொண்டதால் நித்திய
ஜீவனை பெற்றுக் கொண்டேன் ஐயா - எனக்காக புறக்கணிக்கப்பட்டீர்
அதனால் நான் ஏற்றுக் கொள்ளப்பட்டேன்
எனக்காக அவமானமடைந்து உம்
மகிமையிலே பங்குபெறச் செய்தீர் - சிலுவையிலே ஏழ்மையானதால் என்னை
செல்வந்தனாய் மாற்றிவிட்டீரே நீர்
சாபங்களை சுமந்து கொண்டதால் நான்
ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 21 | Pothumanavarae Puthumaiyanavare | போதுமானவரே புதுமையானவரே | Tamil Christian Song Lyrics