- காலத்தின் பலனை
உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே..
ஞாலத்தில் எனது
வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக – (2)
இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
காலத்தில் அடங்கா
கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்
2.புல்லைப்போல் ஒழியும்
தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே..
குமிழிபோல் தோன்றி
மறைந்திடும் மாயை
உணர்ந்திட உதவிசெய்யும் – (2) – இயேசுவே நீரே
3.உலகத்து ஆசை
மாமிசப் பற்று
சிற்றின்ப சோதனைகள்..
இயேசுவே எங்களை
விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும் – (2) – இயேசுவே நீரே
Dr.N. Emil Jebasingh | Kaalaththin Palanai Ullaththil Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics