Kaalaththin Palanai Ullaththil | காலத்தின் பலனை உள்ளத்தில்

1 minuteread
  1. காலத்தின் பலனை
    உள்ளத்தில் உணர்த்தும்
    காலத்தின் அதிபதியே..
    ஞாலத்தில் எனது
    வாழ்க்கையாம் படகு
    உம் சித்தத்தில் செல்வதாக – (2)

இயேசுவே நீரே நித்தியர்
தேவனே நீரே நித்தியர்
காலத்தில் அடங்கா
கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்

2.புல்லைப்போல் ஒழியும்
தொல்லைகள் நிறைந்த
எம் வாழ்வு வெறும் கதையே..
குமிழிபோல் தோன்றி
மறைந்திடும் மாயை
உணர்ந்திட உதவிசெய்யும் – (2) – இயேசுவே நீரே

3.உலகத்து ஆசை
மாமிசப் பற்று
சிற்றின்ப சோதனைகள்..
இயேசுவே எங்களை
விடுதலை செய்யும்
நித்திய வாசியாக்கும் – (2) – இயேசுவே நீரே

Dr.N. Emil Jebasingh | Kaalaththin Palanai Ullaththil Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
6
1 minuteread

Related Knowledge Base Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

wpChatIcon