Kalangina Nerangalil | கலங்கின நேரங்களில்

< 1 minutesread

கலங்கின நேரங்களில்
கைதூக்கி எடுப்பவரே
கண்ணீரின் பள்ளத்தாக்கில்
என்னோடு இருப்பவரே

உறவுகள் மறந்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை
காலங்கள் மாறினாலும்
நீர் மட்டும் மாறவில்லை

நீங்க தாம்பா என் நம்பிக்கை
உம்மையன்றி வேறு துணையில்லை

  1. தேவைகள் ஆயிரம்
    இன்னும் இருப்பினும்
    சோர்ந்துபோவதில்லை
    என்னோடு நீர் உண்டு

தேவையைக் காட்டிலும்
பெரியவர் நீரல்லோ
நினைப்பதைப் பார்க்கிலும்
செய்பவர் நீரல்லோ

  1. மனிதனின் தூஷணையில்
    மனமடிவடைவதில்லை
    நீர் எந்தன் பக்கமுண்டு
    தோல்விகள் எனக்கில்லை

நாவுகள் எனக்கெதிராய்
சாட்சிகள் சொன்னாலும்
வாதாட நீர் உண்டு
ஒருபோதும் கலக்கமில்லை

0
133
< 1 minutesread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.