பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ – 2
- மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ – 2
பொல்லாதோர் கூட செய்திடார்
நற்பிதா நலம் அருள்வார் – 2 (…பரிசுத்தர்) - சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே – 2
பாவி நீச பாவி நானையா
தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ – 2 (…பரிசுத்தர்) - பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
யாரும் காணா உள் அலங்கோலத்தை – 2
மனம் நொந்து மருளுகின்றேன்
பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் – 2 (…பரிசுத்தர்) - துணை வேண்டும் தகப்பனே உலகிலே
என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே – 2
என் ஜீவன் எல்லையெங்கிலும்
பரிசுத்தம் என எழுதும் – 2 (…பரிசுத்தர்)
Dr. Emil Jebasingh | Parisuthar Kootam Naduvil Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics