Parisuthar Kootam Naduvil | பரிசுத்தர் கூட்டம் நடுவில்

1 minuteread

பரிசுத்தர் கூட்டம் நடுவில்
ஜொலித்திடும் சுத்த ஜோதியே
அரூபியே இவ்வேளையில்
அடியார் நெஞ்சம் வாரீரோ – 2

  1. மீன் கேட்டால் பாம்பை அருள்வார் உண்டோ
    கல் தின்னக் கொடுக்கும் பெற்றோர் உண்டோ – 2
    பொல்லாதோர் கூட செய்திடார்
    நற்பிதா நலம் அருள்வார் – 2 (…பரிசுத்தர்)
  2. சுத்தம் விரும்பும் சுத்த ஜோதியே
    விரும்பா அசுத்தம் யாவும் போக்குமே – 2
    பாவி நீச பாவி நானையா
    தேவா இரக்கம் செய்ய மாட்டீரோ – 2 (…பரிசுத்தர்)
  3. பாரும் தந்தையே எந்தன் உள்ளத்தை
    யாரும் காணா உள் அலங்கோலத்தை – 2
    மனம் நொந்து மருளுகின்றேன்
    பரிசுத்தம் கெஞ்சுகின்றேன் – 2 (…பரிசுத்தர்)
  4. துணை வேண்டும் தகப்பனே உலகிலே
    என்னை எதிர்க்கும் சக்திகள் பல உண்டே – 2
    என் ஜீவன் எல்லையெங்கிலும்
    பரிசுத்தம் என எழுதும் – 2 (…பரிசுத்தர்)

Dr. Emil Jebasingh | Parisuthar Kootam Naduvil Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
122
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.