Aabathu Kalathil Umai Nokki Kupiduvaen Song Lyrics in Tamil – Lyrics and Tune: Pastor.Reegan Dhanasekar – Album: Thuniayalare
ஆபத்து காலத்தில் உம்மை நோக்கி கூப்பிடுவேன்
நீர் எனக்கு பதில் தாருமே -2
வறண்ட என் ஆத்துமாவை திருப்தியாக்கிடும்
நீரே நீர் போதுமே -2
உம்மை தேடுவேன் உம்மை நாடுவேன்
உம் பாதத்தில் வந்து சேருவேன் -2
1. தர்ஷீஸ் கப்பல் அன்று உடையும் நேரத்தில்
பெருங்காற்றும் கொந்தளிப்பும்
பெருகிட்ட வேளையில்-2
கப்பல் உடையும் என்றும் காற்றைக்
கண்டு பயந்திட்ட வேளை
கடும் புயலை கண்டு பயந்து யாவரும்
அதிர்ந்திட்ட வேளை -2
2. யோனாவை மீன் ஒன்று விழுங்கிட்ட வேளையில்
இராப்பகல் மூன்று நாளும்
ஜெபித்திட்ட வேளையில் -2
மீனின் வயிற்றினில் யோனா
தேவனை நோக்கி கூப்பிட்ட வேளை
அந்த நெருக்கத்தின் நிலையை
தேவனும் கேட்டு மாற்றிட்ட வேளை
3. சோர்ந்திட்ட ஆவியோடு ஜெபித்திட்ட வேளையில்
துதியின் வார்த்தயினால் பலியிட்ட வேளையில் -2
கர்த்தர் சொற்படிகேட்டு
மீனும் அன்று விடு வித்த வேளை
யோனா உடனே எழுந்து
நினிவேவை நோக்கி புறப்பட்ட வேளை -2
உன்னத வார்த்தையை நானும் சொல்லுவேன்
தேவ நாமத்தை என்றும் உயர்த்துவேன ;-2
ஆபத்துக்காலத்தில் உம்மை நோக்கி கூப்பிட்டேன்
நீர் எனக்கு பதில் தந்தீரே…