Aanantham Aanantham Perinbam | ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம்

1 minuteread

Aanantham Aanantham Perinbam Lyrics in Tamil – Tamil Christian Songs

ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் பேரின்பம்
இரட்ச்சிப்பின் ஆனந்தம் நித்தம் என் சங்கீதம்
கர்த்தாதி கர்த்தர் இராஜாதி இராஜா என்னை மீட்டதால்

1. உளையான சேற்றில் உழன்றிருந்தேன்
கனிவுடன் தூக்கினார் கன்மலை நிறுத்தினார்
துதிக்கவே புதுப்பாடலால்
நாவினை நிரப்பினார் நன்றி சொல்லுவேன்

2. எரிகோவின் வீதியில் என்னை இயேசு கண்டார்
காயங்களால் கழுவினார் பாவங்கள் போக்கினார்
பாடுவேன் இனி நாளெல்லாம்
ஓடுவேன் அவர் அன்பை எங்கும் கூறுவேன்

3. வானலோக இராஜா வரும் நாளில் நானும்
பறந்தே செல்லுவேன் பாதி வானத்தில்
பாடுகள் என் பாரங்கள்
யாவுமே மாயமாய் மறைந்தே போகுமே

Aanantham Aanantham Perinbam | ஆனந்தம் ஆனந்தம் பேரின்பம் | Tamil Christian Song Lyrics | Old Tamil Christian Songs

0
105
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.