Alainthaen Ulakilae Adiyaathae Edam Thedi Song Lyrics in Tamil – Tamil Christian Song Lyrics
அலைந்தேன் உலகிலே, அறியாத இடம் தேடி
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
பாதை தெரியாத ஆட்டைப்போல
அலைந்தேன் உலகிலே
நல்ல நேசராக வந்து என்னை மீட்டீரே
1. கலங்கினேன் நீர் என்னை கண்டீர்
பதறினேன் நீர் என்னை பார்த்தீர்
கல்வாரியின் அன்டை வந்தேன்
பாவம் தீர நான் அழுதேன்
2. என் காயம் பார்த்திடு என்றீர்
உன் காயம் ஆறிடும் என்றீர்
நம்பிக்கையோடே நீ வந்தால்
துணையாக இருப்பேனே என்றீர்