Arasanai Kanamallirupomaa | அரசனைக் காணமலிருப்போமோ

1 minuteread

Arasanai Kanamallirupomaa- Tamil Christmas Songs and Lyrics

அரசனைக் காணமலிருப்போமோ? – நமது
ஆயுளை வீணாகக் கழிப்போமோ?

அனுபல்லவி
பரம்பரை ஞானத்தைப் பழிப்போமோ? – யூதர்
பாடனு பவங்களை ஒழிப்போமோ? – யூத

சரணங்கள்

  1. யாக்கோபிலோர் வெள்ளி உதிக்குமென்றே, – இஸ்ரேல்
    ராஜ செங்கோலெங்கும் கதிக்குமென்றே,
    ஆக்கமிழந்து மறுவாக்குரைத்த பாலாம்
    தீர்க்கன் மொழிபொய்யாத பாக்கியமே! – யூத — அரசனை
  2. தேசோ மயத்தாரகை தோன்றுது பார்! – மேற்குத்
    திசை வழி காட்டிமுன் செல்லுது பார்!
    பூசனைக் காண நன்கொடைகள் கொண்டே -அவர்
    பொன்னடி வணங்குவோம், நடவுமின்றே! – யூத — அரசனை
  3. அலங்காரமனை யொன்று தோணுது பார்! – அதன்
    அழகு மனமுங் கண்ணும் கவர்ந்தது பார்!
    இளவர சங்கிருக்கும் நிச்சயம் பார்! – நாம்
    எடுத்த கருமம் சித்தியாகிடும் பார்! – யூத — அரசனை
  4. அரமனையில் அவரைக் காணோமே! – அதை
    அகன்று தென்மார்க்கமாய்த் திரும்புவமே!
    மறைந்த உடு அதோ! பார் திரும்பினதே, – பெத்லேம்
    வாசலில் நமைக் கொண்டு சேர்க்குது பார்! – யூத — அரசனை
  5. பொன் தூபவர்க்கம் வெள்ளைப் போளமிட்டே, – ராயர்
    பொற்கழல் அர்ச்சனை புரிவோமே!
    வன்கண்ணன் ஏரோதைப் பாராமல், – தேவ
    வாக்கினால் திரும்பினோம் சோராமல், – யூத — அரசனை

Tamil Christmas Song Lyrics | Arasanai Kanamallirupomaa | அரசனைக் காணமலிருப்போமோ | Tamil Christian Songs and Lyrics

0
70
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.