- பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேன் இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே
கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்
கழுவும் உம் திரு ரத்தத்தாலே
கறை நீங்க இருதயத்தை
- நீரன்றி என்னாலே பாரில்
ஏதும் நான் செய்திட இயலேன்
சேர்ப்பீரே வழுவாது என்னை
காத்து உமக்காய் நிறுத்தி - ஆவியோடாத்மா சரீரம்
அன்பரே உமக்கென்றும் தந்தேன்
ஆலயமாக்கியே இப்போ
ஆசீர்வதித்தருளும் - சுயம் என்னில் சாம்பலாய் மாற
சுத்தாவியே அனல் முட்டும்
ஜெயம் பெற்று மாமிசம் சாக
தேவா அருள் செய்குவீர் - பொன்னையும் பொருளையும் விரும்பேன்
மண்ணின் வாழ்வையும் வெறுத்தேன்
மன்னவன் இயேசுவின் சாயல்
இந் நிலத்தே கண்டதால்