பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும் – என்
தேவனால் எல்லாம் கூடும்
- அவனிடம் இருப்பதெல்லாம்
மனிதனின் புயம் அல்லவா
நம்மிடத்தில் இருப்பதுவோ – நம்
தேவனின் பெலனல்லவா – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
அதற்கொரு தடையில்லையே
மனிதனால் முடியாதது – நம்
தேவனால் முடிந்திடுமே – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - இன்று கண்ட எகிப்தியனை
என்றும் இனி காண்பதில்லை
கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
நீங்கள் ஒன்றும் செய்வதில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு - அநேகரை கொண்டாகிலும்
கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
ரட்சிப்பது கடினமில்லை – நம்
தேவனுக்கு தடையுமில்லை – ஆகையால்
துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
Aayathamaa Vol-6 | Ravi Bharath | Belathinaal Alla Paraakramam Lyrics In Tamil