Belathinaal Alla Paraakramam | பெலத்தினால் அல்ல பராக்கிரமம்

1 minuteread

பெலத்தினால் அல்ல
பராக்கிரமம் அல்ல
ஆவியினால் ஆகும் – என்
தேவனால் எல்லாம் கூடும்

  1. அவனிடம் இருப்பதெல்லாம்
    மனிதனின் புயம் அல்லவா
    நம்மிடத்தில் இருப்பதுவோ – நம்
    தேவனின் பெலனல்லவா – ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
  2. கர்த்தர் செய்ய நினைத்துவிட்டால்
    அதற்கொரு தடையில்லையே
    மனிதனால் முடியாதது – நம்
    தேவனால் முடிந்திடுமே – ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
  3. இன்று கண்ட எகிப்தியனை
    என்றும் இனி காண்பதில்லை
    கர்த்தர் யுத்தம் செய்திடுவார்
    நீங்கள் ஒன்றும் செய்வதில்லை – ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
  4. அநேகரை கொண்டாகிலும்
    கொஞ்சம்பேரை கொண்டாகிலும்
    ரட்சிப்பது கடினமில்லை – நம்
    தேவனுக்கு தடையுமில்லை – ஆகையால்
    துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு
    வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு

Aayathamaa Vol-6 | Ravi Bharath | Belathinaal Alla Paraakramam Lyrics In Tamil

0
74
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.