Vaasalkalai Uyarthungal – Christmas Paamalai Songs
1. வாசல்களை உயர்த்துங்கள்
மகா கர்த்தாவை வாழ்த்துங்கள்
ராஜாதி ராஜா வருவார்,
பெரிய தெய்வ மைந்தனார்.
உலகத்தைச் சிருஷ்டித்து
ரட்சித்த தேவரீருக்கு
துதி, தயாபரா
ஆலோசனைக் கர்த்தா.
2. அவர் மா சாந்தமானவர்,
சகாயர் நீதியுற்றவர்,
ராஜாவின் முடி சுத்தமே,
அவர் செங்கோல் இரக்கமே;
இக்கட்டை நீக்கினார் அன்பாய்
புகழ்ந்து பாடுங்கள் ஒன்றாய்
துதி, மா கர்த்தரே,
பலத்த மீட்பரே.
3. என்னண்டை இயேசு, வாருமேன்,
என் வாசலைத் திறக்கிறேன்
அருள் புரியும் தேவரீர்
என் நெஞ்சில் தங்கக்கடவீர்
மோட்ச வழியைக் காண்பிக்கும்
நல் ஆவியைத் தந்தருளும்
என்றைக்கும் உமக்கே
புகழ்ச்சி, கர்த்தரே.
Christmas Paamaalai Songs | Tamil Christmas Songs | Vaasalkalai Uyarthungal | வாசல்களை உயர்த்துங்கள் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics