எகிப்திலிருந்து கானானுக்கு கூட்டிச் சென்றீரே
உமக்கு கோடி நன்றி ஐயா
அல்லேலூயா அல்லேலூயா
- கடலும் பிரிந்தது
மனமும் மகிழ்ந்தது
கர்த்தரை என்றும்
மனது ஸ்தோத்தரித்தது
அல்லேலூயா அல்லேலூயா - பாறையினின்று
தண்ணீர் சுரந்தது
தாகம் தீர்ந்தது கர்த்தரை
மனமும் போற்றியது
அல்லேலூயா அல்லேலூயா - பாடுகள் பட்டு
மரித்தாரே நமக்காய்
உயிர் கொடுத்தாரே அவரை
உயர்த்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா - யோர்தானைக் கடந்தோம்
எரிகோவை சூழ்ந்தோம்
ஜெயம் கொடுத்தாரே அவரை
துதித்திடுவோமே
அல்லேலூயா அல்லேலூயா
Egipthilirunthu Kaanaanukku Kooti Lyrics In Tamil