எனக்கு ஒத்தாசை வரும்
பர்வதங்களுக்கு நேராய்
கண்களை ஏறெடுப்பேன் – என்
கண்களை ஏறெடுப்பேன்
- காலைத் தள்ளாட வொட்டார் – உன்னைக்
காக்கிறவர் உறங்கார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் – எனக்கு - உன் வலபக்கமாக
கர்த்தர் நிழலாகிறார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் – எனக்கு - தீங்குக்கு விலக்கிக் காப்பார்
அவர் உன் ஆத்துமாவைக் காப்பார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் – எனக்கு - உன் போக்கையும் வரத்தையும்
இதுமுதல் என்றைக்கும் காப்பார்
பகலிலே மேகம் இரவிலே நிலவு
தந்துன்னை ஆதரிப்பார்
தந்துன்னை ஆதரிப்பார் – எனக்கு
Dr.N. Emil Jebasingh | Enaku Othaasai Varum Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics