என்ன என் ஆனந்தம்
என்ன என் ஆனந்தம் சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே
- ஆடுவோம் பாடுவோம் கூடுவோம் ஒன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனை போற்றிடுவோம்
2. பாவங்கள் சாபங்பள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்துத்
தங்கியே விட்டாரே
3. அட்சயன் பட்சமாய் இரட்ச்சிப்பை எங்களுக்
கருளினதாலே
நிச்சயம் இயேசுவைப் பற்றியே சாட்சி
பகர வேண்டியதே
4. வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல் வீட்டில்
ஜெயக்கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனை ஸ்தோத்தரிப்போம்