என்னை ஆட்கொண்ட இயேசு
உம்மை யாரென்று நானறிவேன்
உண்மை உள்ளவரே – என்றும்
நன்மைகள் செய்பவரே
- மனிதர் தூற்றும்போது – உம்மில்
மகிழச் செய்பவரே
அதைத் தாங்கிட பெலன் கொடுத்து
தயவாய் அணைப்பவரே - தனிமை வாட்டும்போது – நம்
துணையாய் இருப்பவரே
உம் ஆவியினால் தேற்றி
அபிஷேகம் செய்பவரே - வாழ்க்கை பயணத்திலே
மேகத்தூணாய் வருபவரே
உம் வார்த்தையின் திருவுணவால்
வளமாய் காப்பவரே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 5 | Ennai Aatkonda Yesu Ummai | என்னை ஆட்கொண்ட இயேசு | Tamil Christian Song Lyrics