Ennai Yaarendru Enakke | என்னை யாரென்று எனக்கே

1 minuteread

என்னை யாரென்று எனக்கே இன்று
அடையாளம் காட்டினீர்
வெறும் மண் என்று உதிரும் புல்லென்று
எனக்கே நினைவூட்டினீர்

  1. என்னால் முடியும் என்று நினைத்தேன் – எனக்கு
    எல்லாம் தெரியும் என்று நடந்தேன் – ஆனால்
    வழியிலே தவறி விழுந்தேன் – நல்ல
    வழியையும் தவறி அலைந்தேன் – நான்
    தொலைந்தேன் என்பதை உணர்ந்தேன்
  2. நானாய் நடந்த சில வழிகள் – இன்று
    வீணாய் மனதிற்குள்ளே வலிகள் – எந்தன்
    சுயத்தினால் கிடைத்த சிறைகள் – எந்தன்
    அகத்தினுள் படிந்த கறைகள் – இல்லை
    நிறைகள் முற்றிலும் குறைகள்
  3. வேண்டாம் இனி எனது விருப்பம் – ஐயா
    உந்தன் வழியில் என்னை நடத்தும் – இன்றே
    எந்தன் சுயமதனை அகற்றும் – அன்று
    எந்தன் ஜீவியமது சிறக்கும் – புத்தி
    பொருத்தும் முற்றிலும் திருத்தும்

Aayathamaa Vol-6 | Ravi Bharath | Ennai Yaarendru Enakke Lyrics In Tamil

0
58
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.