என்னென்று சொல்வேன், எங்கு நான் செல்வேன்
கர்த்தாவின் பேரன்பை விட்டு – (2)
நான் பெற்ற அன்பு எத்தனை அதிகம் – (2)
கர்த்தாவின் இணையற்ற அன்பு – என்னென்று
- காலையும் மாலையும் கருத்தினில் நிற்கும்
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு-(2)
நினைவிலும் கனவிலும் நீங்காது நிற்கும் – (2)
கர்த்தாவின் ஒப்பற்ற அன்பு – என்னென்று - மண்ணில் பிறந்து மண்ணோடு போகும்
மனிதர்க்கு ஏன் இந்த அன்பு – (2)
மதிப்பிற்கு உரியோர், மகிமைக்கு உரியோர் – (2)
என்பதே கர்த்தாவின் தீர்ப்பு – என்னென்று - பார்வோனின் அடிமைகள் கண்டதோர் வெற்றி
உலகத்தின் மனிதர்கள் பெற்றார் – (2)
பாவத்தில் வெற்றி மரணத்தில் வெற்றி – (2)
ஏற்பவர் அனைவர்க்கும் வெற்றி – என்னென்று - அன்பிற்கு ஏங்கும் உள்ளங்கள் உண்டோ
இயேசுவின் அன்பை போல் உண்டோ – (2)
முகம்பார்த்து அல்ல அகம் பார்க்கும் அன்பு – (2)
அனைவர்க்கும் உரித்தான அன்பு – என்னென்று
Dr.N. Emil Jebasingh | Ennedru Solven Engu Naan Selvaen Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics