Immaanuveley Vaarum | இம்மானுவேலே வாரும்

1 minuteread

Immaanuveley Vaarum Vaarumae – Tamil Christmas Song Lyrics

  1. இம்மானுவேலே வாரும், வாருமே,
    மெய் இஸ்ரவேலைச் சிறை மீளுமே;
    மா தெய்வ மைந்தன் தோன்றும் வரைக்கும்
    உன் ஜனம் பாரில் ஏங்கித் தவிக்கும்
    மகிழ்! மகிழ்! சீயோனின் சபையே,
    இம்மானுவேலின் நாள் சமீபமே.
  2. ஈசாயின் வேர்த் துளிரே, வாருமே,
    பிசாசின் வல்ல கோஷ்டம் நீக்குமே;
    பாதாள ஆழம் நின்று ரட்சியும்,
    வெம் சாவின்மேல் பேர் வெற்றி அளியும்.
  3. அருணோதயமே, ஆ, வாருமே,
    வந்தெங்கள் நெஞ்சை ஆற்றித் தேற்றுமே;
    மந்தார ராவின் மேகம் நீக்கிடும்,
    இருண்ட சாவின் நிழல் ஓட்டிடும்.
  4. தாவீதின் திறவுகோலே, வாருமே,
    விண் வாசலைத் திறந்து தாருமே;
    ஒடுக்கமாம் நல் வழி காத்திடும்,
    விசாலமாம் துர்ப் பாதை தூர்த்திடும்.
  5. மா வல்ல ஆண்டவா, வந்தருளும்;
    முற்காலம் சீனாய் மலைமீதிலும்
    எக்காளம் மின்னலோடு தேவரீர்
    பிரமாணம் இஸ்ரவேலுக்களித்தீர்.

Christmas Paamalai Songs | Tamil Christmas Song Lyrics | Immaanuveley Vaarum | இம்மானுவேலே வாரும் | Tamil Christmas Carol Songs

0
60
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.