Jeevanulla Devanai Seavippar | ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார்

1 minuteread
  1. ஜீவனுள்ள தேவனைச் சேவிப்பார் யாருண்டோ?
    ஜீவனை அவர்க்காய் அளிக்க இங்கு யாருண்டோ?
    ஜீவனை இரட்சிப்பவன் இழந்து போவானே
    ஜீவனை வெறுப்பவனோ பற்றிக்கொள்வானே – நம்மிலே ஜீவனுள்ள

2. மனிதர் இன்றும் உலகில் வாழ்ந்து வருவதெவ்வாறு?
ஜீவாதிபதி இயேசு தம் ஜீவன் கொடுத்ததால்
திருச்சபையும் அஸ்திபாரம் இட்டதெவ்வாறு?
பரிசுத்தரின் பரிவாரம் ஜீவன் விட்டதால் – நம்மிலே ஜீவனுள்ள

3. சாத்ராக் மேஷாக் ஆபேத்நேகோ உயர்ந்ததெவ்வாறு?
ராஜாவின் உள்ளத்தில் மாற்றம் வந்ததெவ்வாறு?
ஜீவனைப் பணயம் வைத்துத் தீக்குள் சென்றதால்
சிலையை வணங்கத் தயக்கமின்றி மறுத்து நின்றதால் – நம்மிலே ஜீவனுள்ள

4. பரலோகத்தின் பாக்கியத்தைப் பெறுவோர் யாவரும்
உபத்திரவத்தின் குகைக்குள் நுழைந்து சென்று திரும்பணும்
உலகத்தையும் மேன்மையையும் உதறித் தள்ளணும்
சிலுவையை மட்டும் எடுத்து சுகித்திருக்கணும் – நம்மிலே ஜீவனுள்ள

5.வெள்ளை அங்கி தரித்து நிற்கும் கூட்டம் யார் இவர்?
இரத்தத்தில் தம் அங்கிகளைத் தோய்த்து வெளுத்தவர்
ஜீவனை வெறுத்து, சிலுவையை எடுத்து
வெற்றிக் கீதம் பாடும் கூட்டம் உலகில் உதிக்கட்டும் – நம்மிலே ஜீவனுள்ள

Dr.N. Emil Jebasingh | Jeevanulla Devanai Seavippar Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
65
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.