Kaalaiyila Maraiyira Megathai | காலையில மறையிற மேகத்த

1 minuteread

காலையில மறையிற மேகத்தப்போல
என் பக்தி இருக்கு
எந்த வேளையிலும் பாவத்துக்கு ஆசைப்பட்டுத்தான்
என் புத்தி இருக்கு

ஏமாத்துறேன் நான் ஏமாத்துறேன்
அட எல்லா ஜனத்தையும் ஏமாத்துறேன்
ஏமாந்துட்டேன் நான் ஏமாந்துட்டேன்
அட கடைசியில் நான்தானே ஏமாந்துட்டேன்

  1. மாசா மாசம் காணிக்கதான் என்னோட mindல
    ஆத்துமாவை பத்தி என்ன கவல
    இந்த உலகமே மயங்குது என்னோட Styleல
    என்னென்னமோ நான் அளக்குறேன்
    என் எண்ணம்போல வேதத்த வெளக்குறேன்
    அட கற்பனையில் பிரசங்கிச்சேன்
    விற்பனையில் கண்ண வெச்சேன்
  2. அற்புதங்கள் கர்த்தரோட poweru
    அது என்னாலதான் ஆகுதுன்னு சொல்றது Over
    தரிசனம் கொடுப்பது கர்த்தரு
    அத சொல்லி சொல்லி ஓட்டுரேனே அன்றாடம் Traileru
    சத்தியத்த நான் வித்துபுட்டேன்
    சொத்து சுகம் நான் சேத்துபுட்டேன்
    அட நான் மட்டும்தான் மேடையில
    மக்களெல்லாம் பாடையில
  3. காச கொட்டி பட்டம் எல்லாம் வாங்குறேன்
    அட கண்ட நேரம் என்னபத்தி பேசத்தான் ஏங்குறேன்
    ஏனோ தானோ ஊழியத்த செய்யுறேன்
    அத கேள்வி கேட்டா மக்கள் மேல சிங்கம்போல் பாயுறேன்
    Procedureஆ எல்லாம் மாறிப்போச்சு
    என் பிரசங்கமோ வெறும் வெட்டி பேச்சு
    அட தற்பெருமை ஜாஸ்தி ஆச்சு
    ஊழியங்கள் நாஸ்தி ஆச்சு
  4. ஆரம்பத்தில் உத்தமமா நடந்தேன்
    இப்ப ஆடம்பர வாழ்கையில அன்றாடம் ஆடுறேன்
    ஆண்டவரே கெதியின்னு கிடந்தேன்
    இப்ப ஆனா ஊனா பங்காளரின் வீட்டுக்கு ஓடுறேன்
    மொத்தத்துல எல்லாம் நல்ல வேஷம்
    என் மேலேயே எனக்கு கள்ள நேசம்
    அட ஊருக்குத்தான் உபதேசம்
    உள்ளுக்குள்ள ரொம்ப மோசம்

Aayathamaa Vol-5 | Ravi Bharath | Kaalaiyila Maraiyira Megathai Lyrics In Tamil

0
41
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.