- காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே
சுத்தக் கரத்தை உயர்த்தி
பரிசுத்தர் யாரும் சேருமே
பாவத்தில் சாகும் ஜனத்தை
தடுத்து நிறுத்தக் கூடுமே – இன்றே
காலம் கடந்திடும் முன்னர்
கருத்துக்கொள்வார் வாருமே
ஞாலத்தில் இயேசுவின் நாமம்
எடுத்துச்செல்லச் சேருமே
- தன் கடன் செய்யா மனிதர்
கவலையில் வாடி நிற்பார்
தீபத்தில் எண்ணெய் பெறாதோர்
துக்கத்தில் மூழ்கிடுவார்
ஆத்தும ஆதாயம் சொய்யார்
சிரசினில் அடித்துக்கொள்வார்
மாயமாலம் புரிந்தோர்க்கு
செம்மையாயப் பதில் கொடுப்பார் – இன்றே - சீஷர்கள் யாவரும் ஒன்றாய்
ஜோதியாய் திகழ்ந்திடுவார்
இரத்த சாட்சிகளின் கூட்டம்
வெற்றி முழக்கம் செய்யும்
ஜெபித்தோர், சிரத்தை எடுத்தோர்
ஆனந்த பாடல் செய்குவார்
இராஜாதி இராஜன் இயேசுவே
நீதியாய் அரசாளுவார் – இன்றே - நீ வாழும் இப்பூமி நாசம்
ஆகும் காலம் வருதே
உலகின் கடைசி சந்ததி
நீயாக இருக்கலாமே
எழும்பு, எழும்பு தெபொராள்
பாராக்கே, விழித்துவிடு
தேவைக்கு ஏற்ற பெலனை
இன்றைக்கேப் பெற்றெழும்பு – இன்றே
Dr.N. Emil Jebasingh | Kaalam Kadanthidum Munnar Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics