Kaanakoodaadhadhai En Kangal | காணக் கூடாததை என் கண்கள்

1 minuteread

காணக் கூடாததை என் கண்கள் கண்டபோதும்
கண்ணின்மணி போல காத்துக்கொண்டீரே
போகக்கூடா தூரம் என் கால்கள் போனபோதும்
பாதம் கல்லில் இடராமல் பார்த்துக்கொண்டீரே

செய்யக்கூடா செய்கை என் கைகள் செய்தபோதும்
உந்தன் கையில் என் பெயரை வனைந்தீரே
எண்ணக்கூடா எண்ணம் என் சிந்தை கொண்டபோதும்
நீர் என்னைத்தானே எண்ணினீரே இயேசுவே இயேசுவே

எந்தன் துரோகத்தாலே வாடுகிறேன்
உந்தன் அன்பைத்தானே பாடுகிறேன்

உந்தன் அன்பைப்போல அன்பு இல்லை – ஐயா
உம்மைப்போல தெய்வமில்லை

Aayathamaa Vol-6 | Ravi Bharath | Kaanakoodaadhadhai En Kangal Lyrics In Tamil

0
54
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.