கலங்காதே கலங்காதே
கர்த்தர் உன்னை கைவிடமாட்டார்
- முள்முடி உனக்காக
இரத்தமெல்லாம் உனக்காக
பாவங்களை அறிக்கையிடு
பரிசுத்தமாகிவிடு – நீ - கல்வாரி மலைமேலே
காயப்பட்ட இயேசுவைப் பார்
கரம் விரித்து அழைக்கின்றார்
கண்ணீரோடு ஓடி வா – நீ - காலமெல்லாம் உடனிருந்து
கரம்பிடித்து நடத்திச் செல்வார்
கண்ணீரெல்லாம் துடைப்பார்
கண்மணி போல் காத்திடுவார் - உலகத்தின் வெளிச்சம்
நீ எழுந்து ஒளி வீசு
மலைமேல் உள்ள பட்டணம்
நீ மறைவாக இருக்காதே - உன் நோய்கள் சுமந்து கொண்டார்
உன் பிணிகள் ஏற்றுக்கொண்டார்
நீ சுமக்கத் தேவையில்லை
விசுவாசி அது போதும் - உலகம் உன்னை வெறுத்திடலாம்
உற்றார் உன்னைத் துரத்திடலாம்
உன்னை அழைத்தவரோ
உள்ளங்கையில் ஏந்திடுவார்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Kalangathe Kalangathe Karthar | கலங்காதே கலங்காதே கர்த்தர் | Tamil Christian Song Lyrics