கனிதரும் காலமன்றோ தேவா நான்
கனியற்ற பாழ் மரம் மூவா
ஆண்டவர் யேசுவின் கிருபையினால் அன்றோ
உன்னத கனிகளைப் பெற்றிடுவேன்
- அழுகின கனியாய் மாறின யூதாஸ்
அன்பராம் இயேசுவை காட்டியே கொடுத்தான்
அதிசய அன்பினை உதறியதாலே
அநீதியின் கூலியால் அழிந்துவிட்டான் கனி - கொத்தின கனியாய் மாறின பேதுரு
குற்றமில்லாத தன் தேவனை சபித்தான்
கிறிஸ்துவின் கண்களில் கனிந்த நற்பார்வையால்
கருத்துடன் கர்த்தரை கண்டடைந்தான் கனி - பூரண கனியாம் யோவானைப் போல
பூரண அன்பினால் சாய்வேன் உம்மார்பில்
சிலுவையின் கனிகளைப் பகிர்ந்தளித்து நான்
சிலுவையில் அடைக்கலம் பெற்றிடுவேன் கனி - ஆயிர வருஷ இயேசுவின் ஆட்சியில்
கசப்பான கனிகளை ஆலையில் மிதிப்பார்
பரிசுத்த கனியாம் ஆத்துமாவே நீ
அல்லேலூயா என்றும் பாடிடுவாய்