கர்த்தரை நம்பிடுங்கள்
அவர் கைவிடவேமாட்டார்
- உயிர் வாழ எதை உண்போம்
உடல் மூட எதை உடுப்போம்
என்றே கவலைப்படல் வேண்டாம்
உணவை விட உயிரும்
உடையைவிட உடலும்
உயர்ந்தவை அல்லவா
வானத்துப் பறவையைப் பாருங்கள்
அவை விதைப்பதுமில்லை
அறுப்பதுமில்லை சேர்த்து வைப்பதில்லை
கர்த்தர் காக்கின்றார்
- கவலைப்படுவதினால்
எவன் தன் வளர்த்தியிலே
ஒரு முழம் கூட்ட முடியும்
எதை உடுப்போம் என்று
கவலையே வேண்டாம்
சொல்வதைக் கேளுங்கள்
வயல்வெளி மலர்களைப் பாருங்கள்
அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை
கவலைப்படுவதுமில்லை
கர்த்தர் உடுத்துகின்றார்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 2 | Kartharai Nambidungal Avar |கர்த்தரை நம்பிடுங்கள் அவர் | Tamil Christian Song Lyrics