கர்த்தாவே உமது கூடாரத்தில்
தங்கி வாழ்பவன் யார்
குடியிருப்பவன் யார் – 2
- உத்தமனாய் தினம் நடந்து
நீதியிலே நிலை நிற்பவன்
மனதார சத்தியத்தையே
தினந்தோறும் பேசுபவனே - நாவினால் புறங்கூறாமல்
தோழனுக்குத் தீங்கு செய்யாமல்
நிந்தையான பேச்சுக்களை
பேசாமல் இருப்பவனே - கர்த்தருக்குப் பயந்தவரை
காலமெல்லாம் கனம் செய்பவன்
ஆணையிட்டு நஷ்டம் வந்தாலும்
தவறாமல் இருப்பவனே - கைகளில் தூய்மை உள்ளவன்
இதய நேர்மை உள்ளவன்
இரட்சிப்பின் தேவனையே
எந்நாளும் தேடுபவனே
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 4 | Karthave Umathu Kudaarathil | கர்த்தாவே உமது கூடாரத்தில் | Tamil Christian Song Lyrics