Karuvariyil Ennai Alaithathu Lyrics in Tamil
கருவறையில் என்னை அழைத்தது நீங்காதனப்பா
தனிமையிலே துணை நின்றவர் நீங்க இயேசப்பா-2
என்னை உள்ளங்கையில் வரைந்து
ஒரு தகப்பனைப் போல் சுமந்து – 2
என்னை மார்பினிலே அணைத்ததை நான்
என்ன சொல்லுவேன் – 2
( அனுபல்லவி )
தகப்பனே ஆராதனை – என்
மீட்பரே ஆராதனை -2
(1) வியாதியின் நேரத்தில் துணையாய் இருந்தீர்
மரணத்தின் படுக்கையில் விடுதலை கொடுத்தீர் -2
கண்ணீரோடு அழுத வேளையில்
கரம்பிடித்து துணையாய் நின்றீர் – 2
கரம் பிடித்து துணையாய் நின்றீர்
(2) சோர்ந்திட்ட நேரமெல்லாம் புது பெலன் கொடுத்தீர்
சுகம் தந்து இதுவரையும் என்னை தாங்கினீர் -2
தாயைப்போல என்னை தேற்றினீர்
ஒரு தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர் -2
என் தந்தையைப்போல் தோள்களில் சுமந்தீர்
(3) வழியும் சத்தியும் ஐீவனுமானீர்
காலமெல்லாம் எனக்கு புது பெலன் ஆனீர் – 2
எனக்காக இரத்தம் சிந்தினீர்
உந்தன் மகனாய் என்னை மாற்றினீர் – 2
எந்தனுக்காய் உம்மையே தந்தீர்
4)அன்பினைதந்து எனக்கு அடைக்கலமானீர்
ஆதரவாக எந்தன் அருகினில் நின்றீர் – 2
பாரத்தாலே சோர்ந்த வேளையில்
பாரம் நீக்கி என்னை காத்தீர் – 2
என் பாரம் நீக்கி என்னை காத்தீர்
Album: Thuniayalare Vol.2 | Pastor.Reegan Dhanasekar | Karuvariyil Ennai Alaithathu | கருவறையில் என்னை அழைத்தது | Tamil Christian Songs and Lyrics