Aathi Pidha Kumaaran Aavi Thiri | ஆதிபிதாக் குமாரன் ஆவி திரி!

1 minuteread

Aathi Pidha Kumaaran Aavi Thiri Lyrics in Tamil – Tamil Christian Keerthani Songs

ஆதிபிதாக் குமாரன்-ஆவி திரி யேகர்க்-கு
அனவரதமும் தோத்திரம்!-திரியேகர்க்கு-கு
அனவரதமும் தோத்திரம்.

நீத முதற் பொருளாய் நின்றருள் சருவேசன்,
நிதமும் பணிந்தவர்கள் இருதயமலர் வாசன்,
நிறைந்த சத்திய ஞான மனோகர,
உறைந்த நித்திய வேத குணாகர,
நீடு வாரி[2] திரை சூழு மேதினியை
மூடு பாவ இருள் ஓடவே அருள்செய். – ஆதி

1. எங்கணும் நிறைந்த நாதர்-பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்,
துங்கமாமறைப்பிர போதர்,-[3]கடைசி நடு
சோதனை செய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான் பகர்அடி[4] முடிவில்லான்,
பன் ஞானம், சம்பூரணம், பரிசுத்தம், நீதி என்னும்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு, பரி
பாலனத்தையும்பண் பாய்நடத்தி அருள். – ஆதி

2. நீதியின் செங்கோல் கைக்கொண்டு-நடத்தினால் நாம்
நீணிலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில் தள்ளுண்டு-மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த பாலன் யேசுவைக்கொண்டு
பரன் எங்கள்மிசை தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சங்சலம்,
இடைஞ்சல் வந்த போதே தயவாகையில்
பாரில் நேரிடும் அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள் போலவே சிதறும். – ஆதி

    – காபிரியேல் உபதேசியார்

    | Aathi Pidha Kumaaran Aavi Thiri | ஆதிபிதாக் குமாரன்-ஆவி திரி! | Tamil Christian Songs and Lyrics | Tamil Christian Keerthanaigal Song Lyrics |

    0
    84
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.