Magimaiyin Nambikkai Maaridatha | மகிமையின் நம்பிக்கையே மாறிடாத

1 minuteread

மகிமையின் நம்பிக்கையே
மாறிடாத என் இயேசையா
உம்மையல்லோ பற்றிக் கொண்டேன்
உலகத்தில் வெற்றிக் கொண்டேன்

துதித்து துதித்து மகிழ்ந்து புகழ்ந்து
தூயவர் உம்மை நான் பாடுவேன்

  1. ஆத்துமாவின் நங்கூரமே
    அழிவில்லா பெட்டகமே
    நேற்றும் இன்றும் ஜீவிக்கின்ற
    நிம்மதியின் கன்மலையே
  2. நல் மேய்ப்பரே நம்பிக்கையே
    நானும் உந்தன் ஆட்டுக்குட்டி
    உம்மைத் தானே பின் தொடர்ந்தேன்
    உம் தோளில் தான் நானிருப்பேன்
  3. பள்ளத்தாக்கில் நடந்தாலும்
    பயமில்லை பாதிப்பில்லை
    உம் குரலோ கேட்குதையா
    உள்ளமெல்லாம் அன்பால் பொங்குதையா
  4. பிரகாசிக்கும் பேரொளியே
    விடிவெள்ளி நட்சத்திரமே
    உம் வசனம் ஏந்திக் கொண்டு
    உலகெங்கும் சுடர்விடுவேன்

Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 5 | Magimaiyin Nambikkai Maaridatha | மகிமையின் நம்பிக்கையே மாறிடாத | Tamil Christian Song Lyrics

0
57
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.