மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே
மறுரூபம் ஆகணும் தகப்பனே – ஜெப
உலகை மறக்கணுமே தகப்பனே
உம் குரல் கேட்கணும் நாள்முழுதும்
- காலையும் மாலையும் மதிய வேளையும்
கைகள் உமை நோக்கி உயரணுமே
அழியும் உலகத்திற்காய் கதறணுமே
அறுத்துக் களஞ்சியத்தில் சேர்க்கணுமே - உமது வார்த்தைகள் உணவாய் மாறணும்
ஒவ்வொரு நாளும் தியானிக்கணும்
வேதத்தின் வெளிச்சத்திலே நடக்கணும்
வெற்றிக் கீதங்கள் நான் பாடணும் - ஞானத்தைப் போதித்து அறிவை உணர்த்தி
தீர்க்கதரிசனம் சொல்லணும்
ஆவிகள் பகுத்தறியும் வரம் வேண்டும்
வியாதிகள் நீக்கும் ஆற்றல் வேண்டும்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 17 | Malaimel Yeri Vanthen Thakapane | மலைமேல் ஏறி வந்தேன் தகப்பனே | Tamil Christian Song Lyrics