மனந்திரும்பும் பாவிக்கெல்லாம் புகலிடமே
மனதுருகும் தேவன் எந்தன் மறைவிடமே
வந்தனமப்பா வந்தனமே
- திருச்சபை நடுவில் உமது
பெயரைச் சொல்லியே பாடிடுவேன்
திருக்கரம் செய்திட்ட
அற்புதம் நினைக்கிறேன்
உம்முடைய செயல்களெல்லாம்
நினைக்கும்போது வியக்கிறேன் - இரதங்களும் குதிரைகளும்
எங்களை இரட்சிக்க முடியவில்ல
உம்மை விட்டால் எங்களுக்கு
வேறு வழியில்ல
உம்மை நம்பி வந்துவிட்டோமே
வேறொரு நாமத்தை அறியவில்ல - கர்த்தருக்குள் மகிழ்ந்திருக்கும்
பிள்ளைகளுக்கென்றும் நிம்மதியே
காத்திருந்தால் கிடைக்கும்
அவரின் கிருபையே
என்னை விட்டு எடுபடாத நல்ல
பங்கு அவர் சந்நிதியே
Aayathamaa Vol-3 | Ravi Bharath | Manam Thirumbum Paavikkellaam Lyrics In Tamil