- மந்தையில் சேரா ஆடுகளே
எங்கிலும் கோடி கோடி உண்டே
சிந்தையில் ஆன்ம பாரம் கொண்டே
தேடுவோம் வாரீர் திருச்சபையே
மந்தையில் சேரா ஆடுகளே
அழைக்கிறார் இயேசு
அவரிடம் பேசு நடத்திடுவார்
- காடுகளில் பல நாடுகளில்
என் ஜனம் சிதறுண்டு சாகுவதா
பாடு பட்டேன் அதற்காகவுமே
தேடுவோர் யார் என் ஆடுகளை - சொல்லப்பட்டிராத இடங்கள் உண்டு
என்னை அங்கு சொல்ல இங்கு ஆட்கள் உண்டு
அழைப்பு பெற்றோர் யாரும் புறப்படுவீர்
இது ஆண்டவன் கட்டளை கீழ்ப்படிவீர் - எனக்காய் பேசிட நாவுவேண்டும்
என்னைப்போல் அலைந்திட கால்கள் வேண்டும்
என்னில் அன்பு கூர ஆட்கள் வேண்டும்
இதை உன்னிடம் கேட்கிறேன் தரவேண்டும்