மன்னிப்பு அருளும் மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ – (2)
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ? – என்னைத்
இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ
என்தன் சிந்தைக்கு மேலான
விந்தை அல்லோ? – என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ…
- கைகளும் கால்களும் செய்தவற்றை – அந்த
ஆணிகள் துளைத்ததால் நீக்கினீரோ – (2)
பல வலைகளில் சிக்கிய பாவி என்னை
இந்த வாதைகள் ஏற்றுநீர் மீட்டதேனோ – இது - பவுல் போன்ற தூயவர் செய்த வேலை – இந்தப்
பாவியின் பொறுப்பினில் தந்ததேனோ – (2)
உன்தன் பரலோக தூதரும் விரும்பும் வேலை
இந்தத் தரணியில் எம்மிடம் வைத்ததேனோ – இது
மாபெரும் அரசே
உனதுள்ளம் சமுத்திரமோ – (2)
தண்டிக்க மறுத்த தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ? – என்னைத்
இது எங்கும் உண்டோ
இது எங்கும் உண்டோ
என்தன் சிந்தைக்கு மேலான
விந்தை அல்லோ? – என்னைத்
தண்டிக்க மறுத்தத் தரணியின் அரசே
உனதுள்ளம் கருணை ஊற்றோ…
Dr.N. Emil Jebasingh | Mannippu Arulum Maaperum Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics