Naam Orumithu Vazhvom | நாம் ஒருமித்து வாழ்வோம்

1 minuteread

நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்
நம் நடுவில் இயேசு நிற்பாரே – (2) – அப்போது
இருபதில் இருபதற்கு மேல் எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால் – எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்

  1. போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள்
    எதுவும் எங்கும் இல்லை
    சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்
    என்பது யாரிலும் இல்லை – (2)
    பழைய மனுஷன் இல்லை நம்மில்
    பாவ சுபாவமே இல்லை – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
  2. கேபா, அப்பல்லோ, பவுல் என்ற
    பிரிவினை நம்மில் இல்லை
    அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்
    என்பார் யாருமே இல்லை – (2)
    சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்
    வடக்கு தெற்கும் இல்லை – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
  3. உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்
    என்ற தத்துவம் இல்லை
    இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற
    வித்தியாசம் இல்லை – (2)
    அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை
    அடித்துச் செல்லுதல் உண்டு – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
  4. ஒருவர் கால்களை ஒருவர் கழுவும்
    பணிவிடை ஆவியே உண்டு
    ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்
    சேவை உள்ளமே உண்டு – (2)
    தலைக்கணமே இல்லை நம்மில்
    இடைவெளியே இல்லை – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
  5. ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்
    வந்து இரங்குதல் உண்டு
    அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்
    சபையிலும் தளத்திலும் உண்டு – (2)
    பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்
    விடுதலை ஆவியே உண்டு – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
  6. ஏழு நதியிலும் இரவும் பகலும்
    திரு முழுக்குகள் உண்டு
    சீரும் சிறப்பும் பெற்று மகிழும்
    பாரதம் ஓர்நாள் உண்டு – (2)
    சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்
    நீதி நியாயமே உண்டு – ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
    நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்

Dr.N. Emil Jebasingh | Naam Orumithu Vazhvom Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics

0
67
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.