நாம் ஒருமித்து வாழ்வோம் என்றால்
நம் நடுவில் இயேசு நிற்பாரே – (2) – அப்போது
இருபதில் இருபதற்கு மேல் எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால் – எப்படி
நம் நடுவில் இயேசு நிற்பதால்
- போட்டிகள் பொறாமைகள் கசப்புகள் சதிகள்
எதுவும் எங்கும் இல்லை
சிறியவன் பெரியவன் பதவிகள் அதிகாரம்
என்பது யாரிலும் இல்லை – (2)
பழைய மனுஷன் இல்லை நம்மில்
பாவ சுபாவமே இல்லை – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம் - கேபா, அப்பல்லோ, பவுல் என்ற
பிரிவினை நம்மில் இல்லை
அவர்கள் கூட்டம் இவர்கள் கூட்டம்
என்பார் யாருமே இல்லை – (2)
சபைகள் ஸ்தாபனம் இல்லை நம்மில்
வடக்கு தெற்கும் இல்லை – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம் - உயர்ந்த குலத்தோர் தாழ்ந்த குலத்தோர்
என்ற தத்துவம் இல்லை
இரண்டு டம்ளர் இரண்டு வரிசை என்ற
வித்தியாசம் இல்லை – (2)
அன்பின் வெள்ளம் உண்டு அவைகளை
அடித்துச் செல்லுதல் உண்டு – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம் - ஒருவர் கால்களை ஒருவர் கழுவும்
பணிவிடை ஆவியே உண்டு
ஒருவர் பாரத்தை ஒருவர் சுமக்கும்
சேவை உள்ளமே உண்டு – (2)
தலைக்கணமே இல்லை நம்மில்
இடைவெளியே இல்லை – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம் - ஆவியின் வல்லமை அனைவர் தலையிலும்
வந்து இரங்குதல் உண்டு
அற்புதம் அடையாளம் ஆச்சரியம் அதிசயம்
சபையிலும் தளத்திலும் உண்டு – (2)
பேய்கள் ஓடுதல் உண்டு எங்கும்
விடுதலை ஆவியே உண்டு – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம் - ஏழு நதியிலும் இரவும் பகலும்
திரு முழுக்குகள் உண்டு
சீரும் சிறப்பும் பெற்று மகிழும்
பாரதம் ஓர்நாள் உண்டு – (2)
சட்டம் ஒழுங்கு உண்டு எங்கும்
நீதி நியாயமே உண்டு – ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் -ஏன்?
நம் நடுவில் இயேசு நிற்பதால் – நாம்
Dr.N. Emil Jebasingh | Naam Orumithu Vazhvom Lyrics in Tamil | Tamil Christian Song Lyrics