- நான் நேசிக்கும் தேவன்
இயேசு என்றும் ஜீவிக்கிறார் – அவர்
நேற்றும் இன்றும் நாளை என்றும் மாறாதவர் - நான் பாடி மகிழ்ந்திடுவேன் – என்
இயேசுவைத் துதித்திடுவேன்
என் ஜீவிய காலமெல்லாம் – அவர்
பாதத்தில் அமர்ந்திருப்பேன் - கடலாம் துன்பத்தில், தவிக்கும் வேளையில்
படகாய் வந்திடுவார்
இருள் தனிலே பகலவனாய்
இயேசுவே ஒளி தருவார் - பாவ நோயாலே வாடும் நேரத்தில்
மருத்துவராகிடுவார்
மயங்கி விழும் பசிதனிலே
மன்னாவைத் தந்திவார் - தூற்றும் மாந்தரின் நடுவில் எந்தனை
தேற்றிட வந்திடுவார்
கால் தளரும் வேளைதனில்
ஊன்று கோலாய் ஆகிடுவார் - நேசர் என்னோடு துனையாய் ஜீவிக்க
நான் இனி கலங்கிடேனே
எந்தனுக்கே காவல் அவர்
நான் உடல் அவர் உயிரே
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619