நன்மைகளின் நாயகனே,
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே,
உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே,
நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே,
உயிரோடு கலந்தவரே
- கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே - உமக்காய் காக்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன் - கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர் - எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர்
சர்வ வல்லவரே - எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து
மணமகளாக்கிவிட்டீர் - ஏசேக்கு, சித்னா
இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது
தடைகளும் விலகியது - பழையன கடந்தன
புதியன புகுந்தன
எல்லாமே புதிதாயிற்று
அல்லேலூயா பாடுவேன்
Father.S.J. Berchmans Song Lyrics | Jebathotta Jeyageethangal Vol – 21 | Nanmaigalin Nayagane Nandri | நன்மைகளின் நாயகனே நன்றி | Tamil Christian Song Lyrics