Neer Ennai Kankindra Devan Christian Lyrics in Tamil
நீர் என்னை காண்கின்ற தேவன்
நீர் என்னை காண்கின்ற தேவன்-2
கண்ணீரை துடைத்தீர் கைவிடாமல் காத்தீர்-2
நீர் என்னை காண்கின்ற தேவன்
( அனுபல்லவி )
ஆராதனை ஆராதனை ஆராதனை
உமக்கு ஆராதனை -2
(1)
அனாதையாக நான் தனிமையின் பாதையில்
அழுதிட்டபோது என் குரல் கேட்டவரே -2
கண்ணீரை துடைத்தவரே
காலமெல்லாம் காத்தவரே -2
கனிவுடன் அணைத்தவரே உமக்கு ஸ்தோத்திரம்-2
(2)
வனாந்திர பாதையில் அலைந்திட்ட வேளையில்
வாடி நின்றபோது எனக்கு துணையானவரே -2
தண்ணீரை தந்தவரே தாகத்தையும் தீர்த்தவரே-2
தயவுடன் காத்தவரே உமக்கு ஸ்தோத்திரம் -2
(3)
ஆதரிப்பார் யாருமின்றி தவித்திட்ட வேளையில்
அடிமையின் துயரம் நீக்க தேடி வந்தவரே-2
ஆதரவு தந்தவரே அடைக்கலமானவரே -2
ஆறுதலின் நாயகரே உமக்கு ஸ்தோத்திரம் -2
Album: Thuniayalare -3 | Pastor.Reegan Dhanasekar Songs and Lyrics in Tamil | Neer Ennai Kankindra Devan | நீர் என்னை காண்கின்ற தேவன் | Tamil Christian Songs and Lyrics
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619