Oh Bethlehmey Sitturae | ஓ பெத்லகேமே சிற்றூரே

1 minuteread

Oh Bethlehmey Sitturae – Tamil Christian Song Lyrics – Christmas Paamaalai Songs

  1. ஓ பெத்லகேமே சிற்றூரே
    என்னே உன் அமைதி
    அயர்ந்தே நித்திரை செய்கையில்
    ஊர்ந்திடும் வான்வெள்ளி
    விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
    உன் வீதியில் இன்றே
    நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
    உன் பாலன் இயேசுவே.
  2. கூறும், ஓ விடி வெள்ளிகாள்
    இம்மைந்தன் ஜன்மமே
    விண் வேந்தர்க்கு மகிமையே,
    பாரில் அமைதியாம்;
    மா திவ்விய பாலன் தோன்றினார்
    மண் மாந்தர் தூக்கத்தில்,
    விழித்திருக்க தூதரும்
    அன்போடு வானத்தில்
  3. அமைதியாய் அமைதியாய்
    விண் ஈவு தோன்றினார்
    மாந்தர்க்கு ஸ்வாமி ஆசியும்
    அமைதியால் ஈவார்
    கேளாதே அவர் வருகை
    இப்பாவ லோகத்தில்;
    மெய் பக்தர் ஏற்பார் ஸ்வாமியை
    தம் சாந்த ஆன்மாவில்
  4. பெத்லெகேம் தூய பாலனே
    இறங்கி வருவீர்;
    ஜனிப்பீர் எங்களில் இன்றும்
    எம் பாவம் நீக்குவீர்;
    நற்செய்தி இவ்விழாதன்னில்
    இசைப்பார் தூதரே;
    ஆ வாரும், வந்து தங்கிடும்
    இம்மானுவேலரே.

Christmas Paamaalai Songs | Tamil Christmas Song Lyrics | Oh Bethlehmey Sitturae | ஓ பெத்லகேமே சிற்றூரே | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics

0
48
1 minuteread
Submit

    Type your search string. Minimum 4 characters are required.