Bethlehem Oorin Sathirathil | பெத்லகேம் ஊரின் சத்திரத்தில்

1 minuteread

Bethlehem Oorin Sathirathil Lyrics in Tamil – Old Tamil Christmas Songs

( இராகம்: தேனினிமையிலும் இயேசுவின் நாமம்)
பெத்லகேம் ஊரின் சத்திரத்தில் ஓர்
உத்தமனைப் பாராய் – மெய்
பக்தர்கள் போற்றும் சீலனாம் இயேசு
பாலகனைப் பாராய் – பெத்லகேம்

1. மானிடர்க்காக மானிலம்‌ வந்த
மா பரனைப்‌ பாராய்‌! – உயர்‌
வானுலகில்‌ நம்மைச்‌ சேர்த்திட வந்த
தாழ்மையின்‌ கோலம்‌ பாராய்‌ – பெத்லகேம்

2. நித்திய ஜீவனைப்‌ புத்திரரக களித்திடும்‌
நிர்‌ மலனைப்‌ பாராய்‌ – தூய
சத்திய போதனை நித்தமும்‌ ஊட்டிடும்‌
சுந்தரனைப்‌ பாராய்‌ – பெத்லகேம்

3. அன்புடன்‌ ஈனப்‌ பாவியை மீட்கும்‌
ஆண்டவரைப்‌ பாராய்‌ நம்‌
இன்னல்கள்‌ போக்கி இடர்களைத்‌ தீர்க்கும்‌
உன்னதனைப்‌ பாராய்‌ – பெத்லகேம்

4. நற்செய்தியை நிதம்‌ நவின்றிடவல்ல
தற்பரனைப்‌ பாராய்‌ உயர்‌
அற்புத சுகங்கள்‌ அளித்திடும்‌ – தூய
இயேசுவையே பாராய்‌ – பெத்லகேம்


    Tamil Christmas Song Lyrics | Bethlehem Oorin Sathirathil | பெத்லகேம் ஊரின் சத்திரத்தில் | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics | Old Tamil Christmas Songs

    0
    44
    1 minuteread
    Submit

      Type your search string. Minimum 4 characters are required.