Ethukkalukiraay Nee Aelai Maathu Naan Enna Seyvaen Lyrics in Tamil – Old Tamil Christmas Songs
ஏதுக்கழுகிறாய் நீ, ஏதுக்கழுகிறாய் நீ
ஏழை மாது நான் என்ன செய்வேன்
கூதலடிக்கிறதோ பாலா
குளிரும் பொறுக்கலையோ?
1. தந்தைக்கு தச்சு வேலை
உன் தாயும் எளியவளே
இந்த மாசங்கடத்தில் பாலா
என்ன பெருமையுண்டு
2. ஜோதியே சுந்தரமே
மனு ஜாதியை மீட்க வந்த
நாதனே நீ அழுதால்
இந்த நாடும் பிரியாதோ
3. இல்லாத ஏழைகட்கு
இன்பம் எல்லாம் அளிக்க வந்த
செல்வமே நீயழுதால் – ஏழை
மாது நான் என்ன செய்வேன்
4. ஜோதியே சுந்தரமே
மனுஜாதியை மீட்க வந்த
நாதனே நீர் அழுதால்
இந்த நாடும் சிரியாதோ?
5. மூடத் துணியில்லையோ
இந்த மாடயையுங் கொட்டிலிலே
வாடையடிக்கிறதோ பாலா
கலங்கித் தவிக்கிறாயோ
Tamil Christmas Song Lyrics | Yethukkazhukirrai Nee | ஏதுக்கழுகிறாய் நீ, | Tamil Christmas Carol Songs | Tamil Christian Songs and Lyrics