Paava Mannippin Nichayathai Petru Kolla Vendum – Tamil Christian Song Lyrics – Father.S.J. Berchmans Song Lyrics – Jebathotta Jeyageethangal Vol 11
பாவமன்னிப்பின் நிச்சயத்தை
பெற்றுக் கொள்ள வேண்டும்
பரலோகத்தில் ஓர் இடம் நீ பெறவேண்டும்
இயேசு தருகிறார் இன்று தருகிறார்
அதற்காகத் தான் சிலுவையிலே
இரத்தம் சிந்தி விட்டார்
1. முதன்முதலாய் தேவனுக்கு உதந்தைத் தேடு
பின் எல்லாமே உனக்கு சேர்த்துத் தந்திடுவார்
2. நீ தேடும் நிம்மதி இயேசு தருகிறார்
நீ நாடும் விடுதலை அவரிடம் உண்டு
3. வருத்தப்பட்டு பாரங்கள் சுமக்கின்ற மகனே
நீ வருவாயா இயேசு இன்று வாழ்வு தந்திடுவார்
4. இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பில்லை
இயேசு ராஜா நாமமில்லாமல் இரட்சிப்பும் இல்லை