- பாரீர் கெத்சமனே
பூங்காவில் என் நேசரையே
பாவி எனக்காய் வேண்டுதல் செய்திடும்
சத்தம் தொனித்திடுதே - தேகமெல்லாம் வருத்தி
சோக மடைந்தவராய்
தேவாதி தேவன் இயேசு நாதன்
படும் பாடுகள் எனக்காக - அப்பா இப்பாத்திரமே
நீக்கும் நின் சித்தமானால்
எப்படியும் உம் சித்தம் செய்ய என்னை
தத்தம் செய்தேன் என்றாரே - இரத்தத்தின் வேர்வையாலே
மெத்தலும் நனைத்தே
இம்மானுவேலன் உள்ளமுருகியே
வேண்டுதல் செய்தனரே - மும்முறை தரைமீதே
தாங் கொணா வேதனையாய்
முன்னவன் தாமே வீழ்ந்து ஜெபித்தாரே
பாதகர் மீ;ட்டிடவே - என்னையும் தம்மைப் போல
மாற்றும் இம்மாநேசத்தை
எண்ணி எண்ணியே உள்ளம் கனிந்து நான்
என்றும் புகழ்ந்திடுவேன்
- tamilchristianlyric@gmail.com
- +91 9884002619